Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓட்டுக்கேட்டு உள்ளே வராதே… தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்!

ஓட்டுக்கேட்டு உள்ளே வராதே… தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்!
, வெள்ளி, 19 மார்ச் 2021 (16:20 IST)
கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள சிஙகாநல்லூர் தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒண்டிபுதூர். அந்த கிராமத்தில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கென்று பொதுக் கழிப்பிடம் இல்லாததால் மக்கள் அனைவரும் திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றனர். இதனால் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் கழிப்பறை கட்டித்தருவேன் என்று உறுதியளித்த எந்த வேட்பாளரும் அதை நிறைவேற்றாததால் இந்த முறை தேர்தலை புறக்கணிக்க அந்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் ’ஓட்டுக் கேட்டு உள்ளே வராதே என்ற பதாகையோடு போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமமுக பற்றி கேள்வி கேட்டால் சப்பென்று அடித்து விடுவேன் – அமைச்சர் பதிலால் சர்ச்சை!