Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கையில் கத்தியோடு உலாவரும் நிர்வாண மனிதன் – சென்னையில் பரபரப்பு !

கையில் கத்தியோடு உலாவரும் நிர்வாண மனிதன் – சென்னையில் பரபரப்பு !
, செவ்வாய், 26 நவம்பர் 2019 (12:47 IST)
சென்னையை அடுத்துள்ள கொடுங்கையூர் எனும் பகுதியில் அதிகாலை நேரங்களில் கையில் கத்தியோடு நிர்வாணமாக மர்ம மனிதன் ஒருவன் உலாவந்து மக்களை பீதியடையச் செய்துள்ளார்.

சென்னை அடுத்து கொடுங்கையூர் எனும் புறநகர்ப் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் கையில் கத்தியோடு நிர்வாணமாக மனிதன் ஒருவர் நடந்து செல்வதாக செய்திகள் வெளியாகின. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதிக்குள்ளாகினர்.

இது சம்மந்தமாக அவர்கள் கொடுங்கையூர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.போலிஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அதிகாலை இருட்டில் நிர்வாணக் கோலத்தோடு அந்த மனிதன் தெருக்களில் நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதிகளில் போலிஸார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். மக்களைப் பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு; தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு