Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள எல்லையில் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை: அமைச்சர் சுப்பிரமணியன்!

கேரள எல்லையில் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை: அமைச்சர் சுப்பிரமணியன்!
, திங்கள், 12 ஜூலை 2021 (12:00 IST)
கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் பொது மக்களை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது என தகவல். 

 
மெல்ல மெல்ல கொரோனா குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொசுக்கள் மூலம் பரவக்கூடிய ஜிகா வைரஸ் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது.  
 
அப்பகுதியைச் சேர்ந்த பெண் உள்பட 18 பேருக்கு ஏற்கெனவே இத்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒன்றரை வயது குழந்தை உள்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொசு மூலம் ஜிகா வைரஸ் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கேரள எல்லை பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் சென்று பரிசோதனை செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் காய்ச்சல் இல்லை. 
 
கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் பொது மக்களை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு மாதங்களில் 33 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளோம் என கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேகதாது அணை விவகாரம்; அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!