Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவை மிரட்டும் ஜிகா வைரஸ்; உஷாரான தமிழ்நாடு! – தீவிர நடவடிக்கை!

கேரளாவை மிரட்டும் ஜிகா வைரஸ்; உஷாரான தமிழ்நாடு! – தீவிர நடவடிக்கை!
, ஞாயிறு, 11 ஜூலை 2021 (09:44 IST)
கேரளாவில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மெல்ல மெல்ல கொரோனா குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணிக்கு  ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் கர்ப்பிணியை தொடர்ந்து மேலும் 14 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. திருவனந்தபுரத்தில் புதிதாக ஜிகா கண்டறியப்பட்ட 14 பேரில் பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜிகா மற்றும் டெங்கு வைரஸ் பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து தூய்மைபடுத்தும் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த தடுப்பூசிகளை கலந்து போட்டால் கொரோனாவுக்கு தீர்வு!? – ஆய்வில் கண்டுபிடிப்பு!