Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் நிபா வைரஸ் பாதிப்பு:? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:46 IST)
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் பாதிப்பு அம்மாநில மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் கேரளாவின் பக்கத்து மாநிலமான தமிழகத்தில் நிபா வைரஸ் பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டிருந்தது
 
இதனை அடுத்து கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. குறிப்பாக தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கோவை மாவட்டத்தில் ஒரு சிலருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பரவிய வதந்தி கோவை மாவட்ட ஆட்சியரும் மறுப்பு தெரிவித்துள்ளார். கோவையில் இதுவரை யாருக்கும் நிபா வைரஸ் பரவி இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை என்றும் தவறான செய்தி பரவுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார் 
 
மேலும் நிபா வைரஸ் குறித்து தவறான தகவலை பரப்பியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திலும் நிபா வைரஸ் பரவியதாக செய்தி உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

யூட்யூபை பார்த்து தன் வயிற்றை தானே கிழித்து ஆபரேஷன் செய்த நபர்! - அதிர்ச்சி சம்பவம்!

நாளை தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்! இன்றே சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்! - பரபரப்பாகும் அரசியல் களம்!

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments