Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 மாணவர்களுக்கு கொரோனா: இழுத்து மூடப்பட்ட கோவை பள்ளி!

3 மாணவர்களுக்கு கொரோனா: இழுத்து மூடப்பட்ட கோவை பள்ளி!
, திங்கள், 6 செப்டம்பர் 2021 (09:26 IST)
கோவையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 3 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த பள்ளி இழுத்து மூடப்பட்டது என்பதும் அந்த பள்ளிக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து கோவை சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது 
 
இதனை அடுத்து பள்ளியை சுத்தம் செய்வதற்காக பள்ளி இழுத்து மூடப்பட்டு தெளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பள்ளிக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்போசிஸ் பிரச்சினைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்ல! – ஆர்.எஸ்.எஸ் விளக்கம்!