Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் நான்கு பேருக்குக் கொரோனா! தஞ்சாவூரில் அதிர்ச்சி!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் நான்கு பேருக்குக் கொரோனா! தஞ்சாவூரில் அதிர்ச்சி!
, திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:42 IST)
தஞ்சாவூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நான்கு மாணவிகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் ஆங்காங்கே பள்ளிகளில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இப்போது தஞ்சாவூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் 4 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போர் நிறுத்தம் - தாலிபன்களிடன் பணிந்த பஞ்ச்ஷிர் போராளிகள்?