Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிபா வைரஸ் - தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நிபா வைரஸ் - தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
, திங்கள், 6 செப்டம்பர் 2021 (14:37 IST)
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. 
 
இதன்படி காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாச பிரச்னை, மன நல பாதிப்பு ஆகியவை நிபா வைரஸுக்கான முக்கிய அறிகுறி களாக கூறப்பட்டுள்ளன. அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பாதித்த நபருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு 21 நாட்கள் தனிமை அவசியம் என வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
 
கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 6 மாவட்ட எல்லைப் பகுதிகளில் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அறிகுறி உள்ள நபர்களின் ரத்தம், தொண்டை சளி, சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 
 
உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து மட்டுமே நிபா வைரஸ் அறிகுறி நோயாளிகளை கையாள வேண்டும் எனவும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் பொதுவான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் சுகாதார பணியாளர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 மாதத்திற்கு முன்பே மடிக்கணினி? அன்பில் மகேஷ் விளக்கம்!