Publish Date: Thu, 06 Jan 2022 (11:48 IST)
Updated Date: Thu, 06 Jan 2022 (11:50 IST)
தமிழகத்தில் நீட் விலக்கு தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது முதலாக நீட் தேர்வு ரத்து செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக அரசு ஆய்வு குழு அமைத்தது.
இந்நிலையில், சட்டமன்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் எனவும், நாளை நீட் தேர்வு குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.