Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!

Siva
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (19:15 IST)
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், அதன் தலைவர் விஜய் தனது உரையின் மூலம் சில முக்கியமான கோரிக்கைகளையும், அரசியல் நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பிரதமர் மோடிக்கு அவர் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவர் வைத்த கோரிக்கைகள் இவைதான்:
 
இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வரும் 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக, கச்சத்தீவை மீட்டுத் தர வேண்டும்
 
நீட் தேர்வினால் நடக்கும் துன்பங்களைச் சுட்டிக்காட்டி, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இந்த இரண்டு கோரிக்கைகளை "செய்வீர்களா பிரதமர் அவர்களே" என்று ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பினார்.
 
மேலும்  "கட்சி தொடங்க முடியாது என்றார்கள், தொடங்கிவிட்டோம்; மாநாடு நடத்த முடியாது என்றார்கள், நடத்திக் காட்டிவிட்டோம். அடுத்து ஆட்சியைப் பிடிக்க முடியாது என்கிறார்கள். ஆட்சியைப் பிடித்துக் காட்டட்டுமா?" என்று தொண்டர்களுக்கு மத்தியில் உற்சாகமூட்டினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

135 வினாடிகளில் 999 கார் புக்கிங்: முன்பதிவில் மிரட்டிய மஹிந்திரா BE 6 ‘பேட்மேன்’ கார்..!

அரசியலில் விஜய்க்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments