Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 31 March 2025
webdunia

இதேபோல மற்ற 6 பேரையும் விடுவிப்போம்! – பேரறிவாளனுக்கு முதல்வர் வாழ்த்து!

Advertiesment
Tamilnadu
, புதன், 18 மே 2022 (12:54 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுவித்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து பலரும் பேரறிவாளன் விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் “31 ஆண்டு சிறைவாசம் முடிந்து விடுதலை காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்தையும், வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேரறிவாளன் என்ற தனி மனிதனின் விடுதலையாக மட்டுமல்லாமல் கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சி மாண்புக்கு இலக்கணமாக அமைந்துள்ளது இந்த தீர்ப்பு. இதேபோல சிறையில் உள்ள மற்ற 6 பேரையும் விடுதலை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்: பேரறிவாளன் விடுதலை குறித்து கமல்!