Publish Date: Wed, 18 May 2022 (08:33 IST)
Updated Date: Wed, 18 May 2022 (08:36 IST)
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமான ஒகேனக்கலில் நீர்வரத்து காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வருகிறது. பொதுவாக கோடைக்காலங்களில் மக்கள் மலைவாச ஸ்தலங்கள் மற்றும் அருவிகளுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. இதனால் சுற்றுலா தளமான ஒகேனக்கலுக்கு அருவியில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் பலர் செல்வது அதிகரித்துள்ளது.
ஆனால் அதேசமயம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கலில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், படகு சவாரி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.