Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்டமசோதா பேரவையில் தாக்கல்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்டமசோதா பேரவையில் தாக்கல்
, திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:44 IST)
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

 
நேற்று நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதனிடையே முதல்வர் ஸ்டாலின், எனும் பலிபீடத்தில் மற்றுமொரு மரணம்! கல்வியால் தகுதி வரட்டும். தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும். நாளை நீட் நிரந்தர விலக்கு சட்ட மசோதா கொண்டு வருவோம் என நேற்று கூறியிருந்தார். 
 
அதன்படி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஆம், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கோரி பேரவையில் மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். 
 
தொடக்கம் முதலே நீட் நுழைவுத்தேர்வை திமுக எதிர்த்து வருகிறது. திமுக பெறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடங்கியுள்ளோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான்’: யோகி ஆதித்யநாத்