Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 1 அன்று ஊரடங்கா? தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (13:45 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில்  மே 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது 
 
இந்த நிலையில் இது குறித்து தற்போது தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மே இரண்டாம் தேதி ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் மே 1ஆம் தேதி மே தினம் என்பதால் அன்றைய தினம் விடுமுறை என்பதால் ஊரடங்கு தேவையில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது
 
மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் பொது விடுமுறை நாள் என்பதால் மே ஒன்றாம் தேதி ஊரடங்கு தேவையில்லை என்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அதனால் மே ஒன்றாம் தேதி ஊரடங்கு தேவையில்லை என்றும் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது 
 
இருப்பினும் முழு ஊரடங்கு குறித்து நாளை தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments