தேர்தல் அதிகாரிகளுக்கு கொரோனா; கூடுதல் அதிகாரிகள் நியமனம்! – தமிழக தேர்தல் அதிகாரி தகவல்!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (13:24 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகமாக உள்ள நிலையில் பல்வேறு கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளதாக சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதற்கு நடுவே மே 2 அன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள தேர்தல் அதிகாரிகள் பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “தேர்தல் அதிகாரிகள் பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணும் பணிகளில் கூடுதல் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 16,387 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மைக்ரோ அப்சர்வர் கண்காணிப்பாளர் இருப்பார். காய்ச்சல் அதிகமாக இருப்பது தெரிய வந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கையில் கனமழை, பெருவெள்ளம்.. கிரிக்கெட் மைதானத்தில் தஞ்சமடைந்த பொதுமக்கள்..!

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் காந்தி மீது 420 பிரிவில் வழக்குப்பதிவு..!

யாருடைய உதவியும் இல்லாமல் ரோபோ டீச்சரை உருவாக்கிய அரசு பள்ளி மாணவர்.. ஆச்சரிய தகவல்..!

உதய நிதிக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜய்தானா? இவரு என்ன புது மேட்டர வலைப்பேச்சு பிஸ்மி கிளப்புறாரு

டிட்வா புயல் எதிரொலி.. சென்னை எழிலகத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments