Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதுவரை ஒரே இடத்தில் சார்ஜ் போடுங்கள்… பெண்கள் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் கைவரிசை !

அதுவரை ஒரே இடத்தில் சார்ஜ் போடுங்கள்… பெண்கள் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் கைவரிசை !
, செவ்வாய், 14 ஜனவரி 2020 (08:06 IST)
சென்னையின் பல இடங்களில் உள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்த பாலாஜி எனும் இளைஞர் 34 செல்போன்களை திருடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஒரு பெண்கள் விடுதிக்கு காலை  7 மணிக்கு வரும் அந்த இளைஞர் விடுதிக்குள் வைஃபை இந்த பிரச்சினை இருப்பதாக கூறி அதை சரிசெய்ய வந்திருப்பதாக சொல்லுகிறார். இதையடுத்து பெண்கள் அனைவரையும் அதுவரை ஒரே இடத்தில் மொபைலை சார்ஜ் போட்டுக்கொள்ளும் படி சொல்கிறார்.

அப்போது பெண்கள் அசரும் நேரம் பார்த்து அங்கிருந்த செல்போன்களை திருடிச் செல்கிறார். இதுபோல பலவிடுதிகளில் இதுவரை 34 பெண்களின் செல்போன்களை அவர் திருடி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து போலிஸார் புகார் செல்ல அந்தந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கேமராக்களை சோதனை செய்தபோது சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுள்ளனர்.  

அவர் தண்டையார்பேட்டை வாஉசி நகரை சேர்ந்த பாலாஜி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவரை கைது செய்த போலீசார் இப்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதி குறித்த தகவல்!