Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

சிசிடிவி காட்சியில் சிக்கிய இளம்பெண் – காவல் நிலையத்தில் சொன்ன திடுக் தகவல் !

Advertiesment
பைக் திருட்டு
, வெள்ளி, 3 ஜனவரி 2020 (18:50 IST)
சென்னை, திருவல்லிக்கேணியில் பைக் திருட முயன்று மாட்டிக்கொண்ட பெண் போலிஸ் ஸ்டேஷனில் திடுக்கிடும் தகவல்களை சொல்லியுள்ளார்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் யாசர் அராபத். இவர் தனது பைக்கை வீட்டுக்கு வெளியே வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டுக்குள் இருந்த சிசிடிவி கேமராவில், தனது பைக் அருகே இரு பெண்கள் சந்தேகப்படும் விதமாக நின்று, கள்ளச்சாவி போட்டு பைக்கைத் திருட முயன்றுள்ளனர்.

இதையடுத்து வெளியே சென்று அவர்களைப் பிடிக்க முயல இரு பெண்களில் ஒருவர் தப்பித்து ஓடியுள்ளார். மாட்டிக் கொண்ட பெண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.  அவரை விசாரித்த போலீஸார் திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த சந்தியா என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தப்பித்து சென்றது அவரது தோழி மோனிஷா எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கை செலவுக்குக் காசு இல்லாமல் சுற்றி வந்த அவர்கள் புத்தாண்டைக் கொண்டாட பைக் திருடும் வேளையில் ஈடுபட்டதாக சொல்லியுள்ளார். தலைமறைவான மோனிஷாவை இப்போது தேடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைவர் ஸ்டைலே தனி... தலைமையை புகழ்ந்து தள்ளிய பாலு!