Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வயது குழந்தையை தாம்பரம் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சென்ற மர்ம இளைஞர்.. அதிர்ச்சியில் போலீஸார்..!

Mahendran
திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (10:10 IST)
சென்னை ரயில் நிலையத்தில் ஒரு இளைஞர் மூன்று வயது ஆண் குழந்தையை தனியாக விட்டு சென்ற சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில், செயிண்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் மூன்று வயது ஆண் குழந்தையை இறக்கிவிட்ட அந்த இளைஞர், பின்னர் திடீரென மறைந்துவிட்டார்.
 
ரயில் நிலையத்தில் தனியாக தவித்த அந்த குழந்தையை ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் மீட்டு, ஆலந்தூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். குழந்தையை விட்டுச்சென்ற அந்த இளைஞரை அடையாளம் காண சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனால், ரயிலில் இருந்து அந்த இளைஞர் முழுமையாக இறங்காமல், குழந்தையை மட்டும் இறக்கிவிட்டுவிட்டு அதே ரயிலில் ஏறி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவத்திற்குப் பிறகு, குழந்தையை விட்டுவிட்டு சென்ற அந்த இளைஞரை அடையாளம் காணும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த செயல் பொதுமக்கள் மத்தியிலும், காவல்துறை மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் பயமுறுத்தல் வெத்துவேட்டு.. சுமார் 1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு.. திமுக ஆதரிக்குமா?

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததால் அதிருப்தி..!

மத அடையாளத்தை மறைத்து இளம்பெண்ணிடம் பழகிய நபர்: மதம் மாற மிரட்டல் விடுத்த நபர் கைது..!

சினிமாவில் நூறு பேரை அடிக்கும் விஜய், நேரில் அடிக்க முடியுமா? செல்லூர் ராஜூ கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments