Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரியனை விட்டு விலகும் பூமி! இன்று முதல் நமது உடலில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

Prasanth K
திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (10:05 IST)

சூரியன் - பூமி இடையே நிகழும் அபெலியன் நிகழ்வினால் உடலில் சில ஒவ்வாமைகள் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

 

விண்வெளியில் பூமி, சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும் நிலையில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாத வாக்கில் சூரியன் - பூமி இடையேயான சுற்றுப்பாதையின் நீளம் அதிகரிக்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலைவு சராசரியாக 147 மில்லியன் கிலோ மீட்டர்கள். இது அபெலியன் நிகழ்வின்போது 152 மில்லியன் கிலோ மீட்டராக நீள்கிறது.

 

இவ்வாறாக சூரியனிடமிருந்து மிக தொலைவுக்கு பூமி நகரும்போது பூமியில் வெப்பநிலை குறைந்து குளிர் அதிகரிக்கிறது. விஞ்ஞானிகள் கணிப்பின்படி, இன்று காலை 5.27 மணிக்கு அபெலியன் நிகழ்வு தொடங்கி ஆகஸ்டு 22ம் தேதி முடிவடைகிறது. 

 

இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கடந்த ஆண்டை விட கூடுதலாக குளிரை உணர முடியும் என்றும், பலருக்கு சளி, காய்ச்சல் ஏற்படலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் தொண்டையில் வலி, இருமல், சுவாச கோளாறு ஏற்படலாம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் பயமுறுத்தல் வெத்துவேட்டு.. சுமார் 1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு.. திமுக ஆதரிக்குமா?

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததால் அதிருப்தி..!

மத அடையாளத்தை மறைத்து இளம்பெண்ணிடம் பழகிய நபர்: மதம் மாற மிரட்டல் விடுத்த நபர் கைது..!

சினிமாவில் நூறு பேரை அடிக்கும் விஜய், நேரில் அடிக்க முடியுமா? செல்லூர் ராஜூ கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments