Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 வயது குழந்தையை தாம்பரம் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சென்ற மர்ம இளைஞர்.. அதிர்ச்சியில் போலீஸார்..!

Advertiesment
தாம்பரம்

Mahendran

, திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (10:10 IST)
சென்னை ரயில் நிலையத்தில் ஒரு இளைஞர் மூன்று வயது ஆண் குழந்தையை தனியாக விட்டு சென்ற சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில், செயிண்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் மூன்று வயது ஆண் குழந்தையை இறக்கிவிட்ட அந்த இளைஞர், பின்னர் திடீரென மறைந்துவிட்டார்.
 
ரயில் நிலையத்தில் தனியாக தவித்த அந்த குழந்தையை ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் மீட்டு, ஆலந்தூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். குழந்தையை விட்டுச்சென்ற அந்த இளைஞரை அடையாளம் காண சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனால், ரயிலில் இருந்து அந்த இளைஞர் முழுமையாக இறங்காமல், குழந்தையை மட்டும் இறக்கிவிட்டுவிட்டு அதே ரயிலில் ஏறி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவத்திற்குப் பிறகு, குழந்தையை விட்டுவிட்டு சென்ற அந்த இளைஞரை அடையாளம் காணும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த செயல் பொதுமக்கள் மத்தியிலும், காவல்துறை மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரியனை விட்டு விலகும் பூமி! இன்று முதல் நமது உடலில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?