சுய உதவி குழு பெண்களுக்கு அசத்தலான சலுகை அறிவிப்பு.. துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 4 நவம்பர் 2025 (13:46 IST)
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்களான மகளிருக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, மகளிர் தங்கள் சுய உதவி குழு அடையாள அட்டையை காண்பிப்பதன் மூலம், தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனைக்காக பேருந்துகளில் 100 கிலோமீட்டர் தொலைவு வரை கட்டணமின்றி எடுத்து செல்லலாம்.
 
வேலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய அவர், இந்தியாவில் முதன்முறையாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். 
 
இந்தச் சலுகை, குழுக்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தி, அவர்களின் வணிகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இதன் மூலம், பெண்கள் தங்கள் தயாரிப்புகளை எளிதில் தொலைதூரச் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும்.
 
முக்கிய அம்சம்: அடையாள அட்டையைப் பயன்படுத்தி, 100 கி.மீ தூரத்திற்கு, 25 கிலோ எடை வரையிலான பொருட்களைப் பேருந்துகளில் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்காதீர்கள்! காவல் ஆணையர் அறிவுரை!

கோவை வன்கொடுமை! தாமதமாக கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிளஸ் 2 தேர்வு: முதல்முறையாக மாணவர்களுக்கு கால்குலேட்டர் அனுமதி..!

ஓபிஎஸ் கூடாரம் காலி.. இருந்த ஒரே ஒரு பிரமுகரும் திமுகவில் இணைந்தார்..!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! ரிசல்ட் எப்போது? - முழு விவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments