Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடலைன்னா அனுமதி இல்லை! – மீனாட்சியம்மன் கோவில் புதிய கட்டுப்பாடுகள்!

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (12:15 IST)
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் சில கோவில்களில் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டும் அனுமதி என்ற கட்டுப்பாடு உள்ளது. மதுரையில் இதுவரை 75 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில் 35 சதவீதம் பேர் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சபரிமலைக்கு மாலை போட்டு செல்பவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் தரிசனம் செய்ய செல்வதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் அவசியம் செலுத்தி இருக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்த 4 புற நுழைவு வாயில்களிலும் 20 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments