Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி சொத்து வரி முறைகேடு: பில் கலெக்டர், உதவியாளர் கைது

Advertiesment
Madurai

Mahendran

, திங்கள், 1 செப்டம்பர் 2025 (10:00 IST)
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்து வரி வசூலில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், பில் கலெக்டர் ஒருவரும் அவரது உதவியாளரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான கட்டிடங்களின் சொத்து வரியை மறு ஆய்வு செய்ய, ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு குழு என மொத்தம் நூறு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக, முன்னதாக உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த மறு ஆய்வின் போதுதான் ரூ.200 கோடி அளவிலான சொத்து வரி முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. வரி வசூலில் ஈடுபட்டிருந்த பில் கலெக்டரும், அவரது உதவியாளரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 
 
இதனையடுத்து, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை, மேலும் பல முறைகேடுகளை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.77000ஐ தாண்டி ரூ.78000ஐ நெருங்கிவிட்ட தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!