Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் நண்பர்களிடம் காரை பறிகொடுத்த டிரைவர்! – சென்னை அருகே பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (13:45 IST)
சென்னை கேளம்பாக்க அருகே டாஸ்மாக்கில் நண்பர்கள் போல பழகிய சிலர் டிரைவரின் காரை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர் கால்டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 13ம் தேதி இவர் கேளம்பாக்கம் – திருப்போரூர் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கே மது அருந்த வந்த மூவர் அவருடன் பழகி நண்பர்களாகியுள்ளனர்.

மது அருந்திவிட்டு கிளம்பியபோது தங்களை குறிப்பிட்ட இடத்தில் காரில் விட்டுவிடும்படி மூவரும் கேட்டுக் கொண்டதால் ரமேஷ்பாபு காரில் அவர்களை அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில் திடீரென கத்தியை காட்டி மிரட்டிய மூவரும் ரமேஷ்பாபுவை இறக்கி விட்டுவிட்டு காரை கடத்திக் கொண்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து ரமேஷ்பாபு அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீஸார் மூவரில் ஒருவரான ராகுல் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். இதையறித்த மற்ற இருவரும் காரை படூர் ரவுண்டானா அருகே காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். காரை மீட்டு ரமேஷ்பாபுவிடம் அளித்த போலீஸார் மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

அடுத்த கட்டுரையில்
Show comments