தீவிரமடையும் போராட்டம்... உஷாராக டெல்லி மெட்ரோ மூடல்!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (13:30 IST)
டெல்லி மெட்ரோவின் 3 ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
மத்திய அரசு அறிவித்துள்ள 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று முதலாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது.
 
இன்றும் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று பீகாரில் ரயிலுக்கு தீ வைத்த நிலையில் இன்று தெலுங்கானாவின் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். தொடர்ந்து நடந்து வரும் இந்த தீ வைப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் டெல்லி மெட்ரோவின் 3 ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது. டெல்லி ஐ.டி.ஒ. மெட்ரோ ரயில் நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்ட நிலையில், டெல்லி கேட், ஜம்பா மசூதியின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments