Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எப்படி எதிர்க்கணும்னு தமிழகத்திடம் கத்துக்கோங்க! – உச்சநீதிமன்றம் முன்னாள் நீதிபதி!

NEP
, வெள்ளி, 17 ஜூன் 2022 (11:43 IST)
தேசிய கல்விக் கொள்கையை பல மாநிலங்களும் எதிர்த்து வரும் நிலையில் தமிழ்நாட்டை பின்பற்ற வேண்டும் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை மீது பல மாநில அரசுகளும் விமர்சனங்களை வைத்துள்ளன. தமிழ்நாடும் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்க முடியாது என தீவிரமாக உள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்க தனி நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா “புதிய தேசிய கல்விக் கொள்கை இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. அடிப்படை உரிமை மற்றும் சமத்துவத்திற்கு எதிரான இக்கொள்கையை எதிர்க்கும் மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டின் நடைமுறையை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக இரண்டாக உடையப் போகிறது..! – ஆறுக்குட்டி எச்சரிக்கை!