Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்களுக்கு அவ்வளவு அதிகாரம் இல்ல..! – நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு தள்ளுபடி!

Advertiesment
எங்களுக்கு அவ்வளவு அதிகாரம் இல்ல..! – நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு தள்ளுபடி!
, வெள்ளி, 17 ஜூன் 2022 (10:52 IST)
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை அளித்தது.

அதை தொடர்ந்து சிறை தண்டனையில் உள்ள நளினி, ரவிச்சந்திரனும் தங்களை விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் போல அதிகாரத்தை பயன்படுத்தி உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யமுடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத் கலவரம் பற்றிய பாடங்கள் நீக்கம்! – சிபிஎஸ்சி எடுத்த முடிவு!