Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல் வரும் முன்னே காப்பாற்றப்படுவார்களா மீனவர்கள்? – குமரி மக்கள் வேதனை!

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (12:40 IST)
அரபிக்கடலில் சிக்கிக் கொண்டுள்ள மீனவர்கள் புயலில் சிக்கி கொள்வதற்கு முன்னர் காப்பாற்றப்பட வேண்டும் என குமரி மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கன்னியாக்குமரி மீனவர்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீன்பிடிப்பதற்காக அரபிக்கடலில் விசைப்படகுகளுடன் பயணித்தனர். அவற்றில் 7 படகுகள் மட்டும் இன்னமும் கரை சேரவில்லை. சுமார் 90 மீனவர்கள் கடலில் சிக்கிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை அவர்களை மீட்கும் பணியை தாமதப்படுத்தி வந்தது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுபெற்றிருப்பதால் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மீனவர்களை மீட்கும் பணி பெரும் இடர்பாடுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. கடலில் சிக்கியுள்ள 7 படகுகளில் இரண்டு படகுடன் மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்துள்ளது. மீத 5 படகுகளில் நிலை குறித்து இதுவரை தெரிய வரவில்லை.

எனவே புயல் உருவாகும் முன்னே மீனவர்களை மீட்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குமரி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments