Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உஷார்! இன்னைக்கு ஃபுல்லா மழைதான்! சென்னையை நெருங்கும் மழை மேகங்கள்

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (12:21 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை தீவிரமடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் சூழலில், தற்போது அது தாழ்வு நிலையிலிருந்து தாழ்வு மண்டலமாக மாறி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் மழை அதிகரிக்கும் எனவும், முக்கியமாக சென்னையில் இன்று முழுவதும் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடற்கரையோர பகுதிகளான நாகப்பட்டினம் முதல் கோடியக்கரை வரையிலான பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments