அதை இப்போது சொல்ல முடியாது.. ராஜ்ய சபா எம்பி பதவியேற்க இருக்கும் கமல் பேட்டி..!

Siva
வியாழன், 24 ஜூலை 2025 (09:58 IST)
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நாளை  மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க உள்ளார். இதற்காக அவர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "நீங்கள் என்னை வாழ்த்தி அனுப்ப வந்திருப்பதாக நான் நினைத்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி," என்று தெரிவித்தார். மேலும், தான் உறுதிமொழி எடுக்கவும், தனது பெயரை பதிவு செய்யவும் செல்வதாகவும் கூறினார்.
 
ஒரு இந்தியனாக தனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பையும், கடமையையும் தான் பெருமையுடன் செய்யப் போவதாக அவர் தெரிவித்தார்.
 
தனது கன்னிப் பேச்சு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, "அதை இப்போது சொல்லக் கூடாது. அங்கேதான் பேச வேண்டும்," என்று கமல்ஹாசன் பதிலளித்தார். அவரது மாநிலங்களவை பதவியேற்பு மற்றும் முதல் உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments