அமித்ஷாவை சந்திக்கிறார் டாக்டர் ராமதாஸ்.. 30 தொகுதிகள் கேட்க திட்டம் என தகவல்..!

Siva
ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (15:08 IST)
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக, கட்சி இரண்டாகப் பிரிந்துள்ளது. இரு தரப்பினரும் தங்களுக்குத்தான் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் உள்ளது என உரிமை கொண்டாடி வருகின்றனர். 
 
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளார். இந்த சந்திப்பு அடுத்த சில நாட்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும்  திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளுடனும் பாமக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி எந்த கூட்டணியில் இணைந்தாலும், பாமகவுக்கு 30 தொகுதிகள் கேட்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ராமதாஸின் இந்தத் திடீர் அரசியல் நகர்வுகள், தமிழக அரசியலில் பாமகவின் எதிர்கால நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? பங்குச்சந்தையில் தாக்கம் இருக்காதே..!

பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொல்லணுமா?!.. தவெகவை சீண்டிய சேகர் பாபு!...

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப்பிரச்சினை அல்ல, அதிகார வர்க்கத்தின் 'ஈகோ' பிரச்சினை: தமிழிசை

20 ஆண்டுகளாக ஏழைகளின் வாழ்வாதாரம்: ஒரே இரவில் அழித்துவிட்டது மோடி அரசு: ராகுல் காந்தி

டெலிவரி செயலிகளில் இருந்து வெளியேற முடிவு செய்யும் உணவகங்கள்: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments