Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எச் ஐ வி நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!

எச் ஐ வி நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!
, செவ்வாய், 20 ஜூலை 2021 (15:58 IST)
தமிழகத்தில் எச் ஐ வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில் தமிழகம் தனது மருத்துவ உள் கட்டமைப்புகளால் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு அனுப்பும் தடுப்பூசிகள் விரைவாக செலுத்தப்பட்டு சில நாட்கள் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்போது எச் ஐ வி நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் அந்த பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 1.55 லட்சம் பேர் எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு! – முதல்வரிடம் அறிக்கை!