Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்த உத்தரவு: காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!

Advertiesment
காஞ்சிபுரம்

Mahendran

, செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (11:12 IST)
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்  ஒருவரை கைது செய்ய நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரமாக முறையீடு செய்யப்பட்டுள்ளது.
 
ஒரு வழக்கின் விசாரணையில், காஞ்சிபுரம் டிஎஸ்பி சட்டத்திற்கு முரணாக நடந்து கொண்டதாக கூறப்பட்டது. இதைப் பரிசீலித்த நீதிபதி, அவரை கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கு எதிராக காவல்துறை, உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
 
காவல்துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி என். சதிஷ்குமார், "இந்த விவகாரத்தில் ஏதோ ஒன்று வழக்கத்துக்கு மாறாக நடந்துள்ளது. சிறை தண்டனை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் இன்று பிற்பகலுக்கு பின் விசாரிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
 
இந்த வழக்கு, தமிழக காவல்துறையினர் மற்றும் நீதித்துறை இடையே ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புஸ்ஸி ஆனந்த மீது வழக்குப்பதிவு: தவெகவை கண்டு ஆளுங்கட்சி பயப்படுகிறது: விஜய்