Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கதேசத்தில் இருந்து ஊடுருவி போலி சாமியார்கள் வேடத்தில் திரியும் நபர்கள்.. 14 பேர் கைது..!

Advertiesment
Uttarakhand Police

Siva

, திங்கள், 8 செப்டம்பர் 2025 (11:15 IST)
உத்தரகண்ட் மாநில காவல்துறை, 'ஆபரேஷன் கலாநெமி' என்ற பெயரில் போலி சாமியார்களை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உட்பட 14 போலி சாமியார்கள் என்பது தெரிய வந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
உத்தரகண்ட் மாநிலத்தில் பொதுமக்களை ஏமாற்றும் போலி சாமியார்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை சட்ட ஒழுங்கு காவல்துறை ஐ.ஜி. நீலேஷ் ஆனந்த் பரானேவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இதுவரை, சுமார் 5,500 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
போலி சாமியார்கள் வேடத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் ஊடுருவி வருகின்றனர். சமீபத்திய கைது நடவடிக்கையில், இதுபோன்ற நபர்களும் சிக்கியுள்ளனர். இது தேசிய பாதுகாப்பு தொடர்பான கவலையையும் எழுப்பியுள்ளது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம்.. வைகோ அதிரடி நடவடிக்கை..!