Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவி மற்றும் மகள்களைக் கொன்ற தந்தை !

மனைவி மற்றும் மகள்களைக் கொன்ற தந்தை !
, வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (17:58 IST)
நாகை மாவட்டத்தில் தந்தையே தன் மனைவி மற்றும் இரு மகள்கள் மீது கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் அருகேயுள்ள புதுச்சேரி கிராமத்தைச்சேர்ந்தவர்  லட்சுமணன். இவரது மனைவி புவனேஸ்வர். இவருக்கு 2 மகள்கள்.

இதில், மூத்த மகள் பள்ளிக்குச் செல்லும்போதும் வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார்.
3 மாதத்திற்கு முன்பு அவரும் அவரது காதலரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்தது, தந்தை    லட்சுமணனுக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த  தந்தை தன் மனைவி மற்றும் இரு மகள்கள் மீது கல்லை போட்டுக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2 ஏவுக்கான தேர்வு அறிவிப்பு