Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

Advertiesment

Mahendran

, புதன், 4 ஜூன் 2025 (12:20 IST)
தேவைப்பட்டால், பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது முக கவசம் அணிந்து வரவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்பதும், இந்தியா முழுவதும் தற்போது 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இருந்தாலும் தீவிரமாக இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் தேவைப்பட்டால் பள்ளிகளில் முக கவசம் அணிவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
 
இருப்பினும், பள்ளிக்கல்வித் துறை சார்பாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே, காய்ச்சல் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், தேவைப்பட்டால் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்படும் என்று தற்போது அமைச்சர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!