Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

Advertiesment
அமெரிக்கா

Mahendran

, புதன், 4 ஜூன் 2025 (12:14 IST)
அமெரிக்காவுக்கு நோய்கிருமிகளை கடத்தி சென்று நோயை பரப்பத் திட்டமிட்ட இரண்டு சீன  விஞ்ஞானிகள் கைது செய்யப்பட்டு இருப்பதை அடுத்து, மிகப்பெரிய விபரீதம் தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Fusarium graminearum என்ற நோய் கிருமியை அமெரிக்காவுக்கு கடத்தியதாக" மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சீனாவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகளை  FBI கைது செய்துள்ளது.
 
இந்த பூஞ்சை வகை கிருமிகளை அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் கலந்து, நோய்களை ஏற்படுத்தி, மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த, இந்த விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட இரண்டு சீன விஞ்ஞானிகள் இடம் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும், இதே போன்று ஏற்கனவே இவர்கள் நோய் கிருமிகளை பரப்ப முயற்சி செய்தார்களா என்பது குறித்த விசாரணையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
அமெரிக்காவின் மிகப்பெரிய பேரழிவுக்கு திட்டமிடப்பட்ட இந்த இரண்டு விஞ்ஞானிகளை கைது செய்திருப்பதால், மிகப்பெரிய விபரீதம் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!