நீட் தேர்வு நடைபெறும் போது மின் தடை ஏற்பட்டதால், தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், மறு தேர்வு நடத்த முடியாது என மத்திய அரசு வாதம் செய்தது. இதனை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு ஜூன் 6-ம் தேதி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் நான்காம் தேதி, நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், சென்னை ஆவடியில் உள்ள ஒரு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது.
இதனால் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும், எனவே தங்களுக்கு மறுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும், 16 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அதனால் மறுத்தேர்வு நடத்த முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை அடுத்து, ஜூன் 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.