எம்ஜிஆர் பெயரை விஜய் சொல்வது எங்களுக்கு சந்தோசம் தான்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

Siva
திங்கள், 24 நவம்பர் 2025 (08:50 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசியபோது, எம்.ஜி.ஆர் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
 
இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, "எம்.ஜி.ஆர் ஒரு நல்ல நோக்கத்திற்காகக் கட்சி அமைத்தார். எம்.ஜி.ஆர் பெயரை பேசாமல் எந்த கட்சியும் அரசியல் நடத்த முடியாது. அந்த வகையில் விஜய்யும் எம்.ஜி.ஆரை குறிப்பிட்டுப் பேசியது எங்களுக்கு சந்தோஷம்தான்" என்று கூறினார்.
 
ஆனால், அதே நேரத்தில், "எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்" என்று விஜய்யை அவர் மறைமுகமாக விமர்சனம் செய்தார். 
 
மேலும், "ஒன்றை மட்டும் என்னால் தெளிவாகச் சொல்ல முடியும். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு அண்ணா தி.மு.க தலைமையிலான ஆட்சிதான் அமையும்" என்றும் அவர் உறுதியாக கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாவட்டங்களில் இன்று கனமழை.. நெருங்கி வருகிறதா காற்றழுத்த தாழ்வு மையம்?

பொளந்து கட்டிய கனமழை.. இன்று எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை?

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments