அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா, ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அனிமல் படம் ஆணாதிக்கக் கருத்துகள் விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.
அடுத்து அவர் பிரபாஸின் 25 ஆவது படமான ஸ்பிரிட் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படம் ஒரு காவல்துறை அதிகாரியைப் பற்றிய கதை என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தீப்தி டிம்ரி, விவேக் ஓப்ராய் ஆகியோர்களோடு கொரிய நடிகர் டான் லீயும் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் சந்தீப்பின் அலுவலகத்தில் நடந்தது. அந்த பூஜையில் பிரபாஸ் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.