Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ஈவிஎம் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதம்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ஈவிஎம் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதம்..!

Siva

, புதன், 10 ஜூலை 2024 (08:56 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில வாக்கு சாவடிகளில் ஈவிஎம் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகி வருவதாகவும் இதனால் தேர்தல் ஆணையம் மீது வாக்காளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 7 மணி முதல் 276 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படுவதாகவும் 110 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக ஐந்து வாக்கு சாவடிகளில் 30 நிமிடங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக மாம்பழப்பட்டு பகுதிக்குட்பட்ட ஒட்டன் காடுவெட்டி வாக்குச்சாவடி எண் 68-ல் உள்ள வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு வாக்காளர்கள் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கின்றனர்.

அதேபோல் கருங்காலிபட்டு வாக்குச்சாவடி எண் 74, கல்பட்டு வாக்குச்சாவடி எண் 78, மாம்பழப்பட்டு வாக்குச்சாவடி எண் 66 ஆகிய வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காணாமல் போன 60 லட்சம் மரங்கள்.. தானாக முன்வந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கு..!