Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல்வாதியா இருந்தாலும் தப்பு தப்புதான்! பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சீமான் ஆதரவு!

Prasanth K
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (11:37 IST)

நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பதவிப்பறிப்பு மசோதாவிற்கு நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவிப்பறிப்பு மசோதாவை தாக்கல் செய்தார். இந்த புதிய மசோதாவின்படி, மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்.எல்.ஏக்கள் தவறு செய்து சிறைக்கு சென்றால், 30 நாட்களுக்குள் விடுதலையாகாவிட்டால் அவர்களது பதவி பறிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

இந்த மசோதா குறித்து ஆதரவு கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்களது பதவி நீக்கப்படுவது சரிதானே! அப்போதுதான் ஒரு ஒழுங்கு இருக்கும். இதுபோன்ற நிறைய சீர்திருத்தங்கள் அரசியலில் தேவை” என்று கூறியுள்ளார்.

 

ஆனால் இந்த சட்டத்தை சாதகமாக பயன்படுத்தி ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினரை 30 நாட்களுக்கும் மேல் சிறையில் அடைத்து பதவியை பறிக்கும் அபாயமும் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்! திமுக துரோகம் செய்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விஜயகாந்த் உயிரோட இருந்தபோது எங்க போனீங்க விஜய்? - பிரேமலதா கேள்வி!

கூட்டணி தலைவர் பழனிசாமிதான்.. ஆனால் முதல்வர்? - செக் வைத்த நயினார் நாகேந்திரன்!

ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்! அடுத்த டிஜிபி யார்? - லிஸ்டில் இருக்கும் முக்கிய அதிகாரிகள்!

மனைவியை எரித்து கொலை செய்த கணவர்.. தப்பிக்க முயன்றபோது துப்பாக்கி சூடு.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments