என்னை ஹோட்டலுக்கு வர சொன்னார் ஒரு இளம் அரசியல்வாதி: பிரபல நடிகை திடுக் புகார்..!

Mahendran
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (11:20 IST)
கேரளா நடிகை ரிணி ஆன் ஜார்ஜ், ஒரு அரசியல் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். அவர் பலமுறை தனக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஒருமுறை தன்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் ரிணி குற்றம் சாட்டியுள்ளார். 
 
தான் புகார் அளித்த பிறகும் அந்த தலைவர் தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள் உள்பட பல பெண்களும் இதே போன்ற அனுபவங்களை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். "தங்கள் குடும்ப பெண்களைப் பாதுகாக்க முடியாத இந்த அரசியல்வாதிகள் வேறு எந்த பெண்ணைப் பாதுகாப்பார்கள்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
நடிகை ரிணி அந்தத் தலைவரின் பெயரை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் அவர் ஒரு காங்கிரஸ் பிரமுகர் தான் என பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
 
இந்த சம்பவம் கேரள அரசியலிலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்