Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பர் முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகை! - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

Advertiesment
Udhayanithi

Prasanth K

, வியாழன், 16 அக்டோபர் 2025 (14:21 IST)

மகளிர் உரிமைத்தொகை பெற புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் முதல் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி அறிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து விவரங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அதில் அவர் “மகளிர் உரிமைத்தொகையாக இதுவரை 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 1.16 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

 

ஒவ்வொரு மகளிருக்கும் தலா ரூ.26 ஆயிரம் வரை இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பலர் பயனடைய வேண்டும் என்பதற்காக நிபந்தனைகளில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

மகளிர் உரிமைத்தொகை கோரி புதிதாக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு டிசம்பர் 15 முதல் உரிமைத்தொகை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: எத்தனை சதவீதம்? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!