சென்னை புறநகர் ரயில் வழித்தடத்தில் மேற்கொள்ளும் பராமரிப்பு காரணங்களுக்காக இன்று சில வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, கவரப்பேட்டை - பொன்னேரி வழித்தடத்தில் மதியம் 1.20 முதல் மாலை 5.20 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அதனால் மூர் மார்க்கெட்டிலிருந்து சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை - மூர்மார்க்கெட் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை, நெல்லூர் - சூலூர்பேட்டை மெமு ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி - தாம்பரம் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
Edit by Prasanth.K