நாளை முதல் அதாவது மார்ச் 20 முதல் கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பதி - கோயம்புத்தூர் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில்களில் புதிய எல்.ஹெச்.பி இணைக்கப்பட உள்ளன.
இந்த இரண்டு ரயில்களிலும் உள்ள பெட்டிகளின் விவரங்கள்
1 ஏசி சேர் பெட்டி
9 இரண்டாம் வகுப்பு சேர் பெட்டிகள்
8 பொதுமக்கள் பயன்பாட்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள்,
1 இரண்டாம் வகுப்பு பெட்டி,
1 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் ஆகியவை இடம்பெறும்.
அதேபோல், பெங்களூரு - திருப்பதி மற்றும் திருப்பதி - பெங்களூரு விரைவு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் புதிய எல்.ஹெச்.பி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த ரெயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும்.
இம்மாற்றங்களை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.