Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனை !

தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனை !
, வெள்ளி, 8 ஜனவரி 2021 (16:52 IST)
வருகின்ற 20 தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

 
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு தமிழக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. 
 
கடந்த நவம்பர் 16 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் முகாமில் பெயர் சேர்ப்பு, நீக்குதல், முகவரி மாற்றம் என 30 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்தும் நிலை குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
 
 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் வாக்கு இயந்திரம் மற்றும் விவிபெட்  வைக்கும் கிடங்கும் தற்போது 7 மாவட்டங்களில் தயார் நிலையில் இருப்பதாகவும். மற்ற 31மாவட்டங்களில் புதிய கிடங்குகளுக்காக பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
 
மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் பதட்டமான வாக்குசாவடி அதிரிக்ககூடும் என தகவல் வெளியான நிலையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்… ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி – உதயநிதி பேச்சு!