Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்த கனிமொழி.. சென்னையில் பிரமாண்ட மாநாடு..!

சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்த கனிமொழி.. சென்னையில் பிரமாண்ட மாநாடு..!
, செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (15:04 IST)
அக்டோபர் 14ஆம் தேதி சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சோனியா காந்திக்கு திமுக எம்பி கனிமொழி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வரும் அக்டோபர் 14ஆம் தேதி சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு நடைபெற இருப்பதாக திமுக எம்பி கனிமொழி அறிவித்துள்ளார். திமுக மகளிர் உரிமை மாநாட்டில் சோனியாகாந்தி, மெகபூபா முப்தி, உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
கனிமொழி எம்பி ஏற்பாட்டில் நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின்  தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 சென்னை ஓஎம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணியில் உள்ள பெண் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே  உள்ளிட்டோரும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆருத்ரா கோல்டு விவகாரம்: ஆர்.கே.சுரேஷின் சொத்துக்களை முடக்க முடிவு