Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைத்தது… விரைவில் இந்தியா பயணம்!

பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைத்தது… விரைவில் இந்தியா பயணம்!
, செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (08:42 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்த முறை முழு உலகக் கோப்பை தொடரும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடக்கின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் கலந்துகொள்ளும் அணிகளில் பாகிஸ்தான் தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் இந்தியாவுக்கு வர விசா வழங்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அணியினருக்கு விசா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இது சம்மந்தமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசியிடம் புகார் அளித்திருந்தது. இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் இருந்து இந்தியா வருவோருக்கு விசா வழங்கவேண்டுமென்றால் மூன்று அமைச்சகங்களிடம் ஒப்புதல் பெற வேண்டுமென்பதால் இந்த தாமதம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் யார் யாருக்கு ஓய்வு?