Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசியன் கேம்ஸ்களுக்கான மைதானத்தைக் கிண்டல் செய்த இந்திய முன்னாள் கிரிக்கெட்டர்!

Advertiesment
ஆசியன் கேம்ஸ்களுக்கான மைதானத்தைக் கிண்டல் செய்த இந்திய முன்னாள் கிரிக்கெட்டர்!
, செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (08:54 IST)
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்க உள்ளது. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டிகளும் நடக்க உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்த தொடருக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதையடுத்து இப்போது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் சுப்ரமண்யன் பத்ரிநாத், ஆசியன் கேம்ஸ் போட்டிகளுக்கான கிரிக்கெட் மைதானங்கள் அளவில் மிகச்சிறியவையாக உள்ளதாக சொல்லப்படுகிறது. பவுண்டரியின் நீளம் 50 மீட்டருக்குக் குறைவாகதான் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதைக் குறிப்பிட்டு நக்கல் செய்யும் விதமாக பத்ரிநாத் “இதுதான் மைதானம் என்றால், நானும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார். 43 வயதாகும் பத்ரிநாத் சில ஆண்டுகளுக்கு முன்பே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைத்தது… விரைவில் இந்தியா பயணம்!